search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள் எரிந்து நாசம்"

    திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 5 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலானது.
    கே.கே.நகர்:

    திருச்சி கே.கே.நகர் சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைந்துள்ளது பென்சனர் காலனி. இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. மேலும் அதிக அளவில் குடிசை வீடுகளும் இருக்கிறது. இந்த நிலையில் இன்று காலை அந்த பகுதியில் சேர்ந்த குப்பைகளுக்கு யாரோ தீ வைத்துள்ளனர். இதில் காற்றின் வேகம் காரணமாக குப்பையில் பற்றிய தீயானது அருகில் இருந்து குடியிருப்புகளுக்கும்  பரவியது. மேலும் நெருப்பு துகள் கள் அருகிலிருந்த தனியார் நிறுவனத்தில் மேல் இருந்த கூரையில் விழுந்து மளமள வென தீ பரவியது. இதனை பார்த்த  அப்பகுதியினர் அணைக்க முயன்றும் முடிய வில்லை. உடனடியாக தீய ணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வேமாக பரவிய தீ அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் வீடு உள்பட 5 பேரின் வீடுகளில் பிடித்து எரிந்தது. தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைக்க முற்பட்டனர். பின்பு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு  துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். 

    இந்த விபத்தில் அந்த வீடுகளில் இருந்த பணம் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மொத்தம் சேத மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட இடத்தை திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ப. குமார் எம்.பி. நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    மேலும் தீ விபத்தில் பாதிக்கப்படாத அளவிற்கு கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.  தீ விபத்து குறித்து ஏர்போர்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆவுடையார்கோவிலில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசமானதால் ரூ. 5 லட்சம் மதிப்பில் பொருட்கள் சேதம் அடைந்தன.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் நெல்லியடி ஊரணிக்கரைச் சேர்ந்தவர்கள் வசந்தி(42), அழகுமலை (55), ராஜாத்தி (60). இவர்கள் 3 பேரின் வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. நேற்று மதியம் திடீரென வசந்தியின் வீட்டில் முதலில் தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென அழகுமலை, ராஜாத்தி வீடுகளுக்கும் பரவியது. 

    இது குறித்து தகவல் அறிந்தும் ஆவுடையார் கோவில் தீயணைப்பு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வீடுகளிலும் இருந்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பணம், நகை, சான்றிதழ், பாத்திரங்கள், வீட்டு உபயோக பொருள்கள் எரிந்து நாசமானது. 

    இச்சம்பவம் குறித்து ஆவுடையார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ பிடித்ததா? அல்லது வேறு காரணமா என விசாரித்து வருகின்றனர்.
    கடலூர் அருகே முன்விரோதத்தில் வீட்டுக்கு தீ வைத்ததால் சிலிண்டர் வெடித்து 6 வீடுகள் எரிந்து சாம்பலானது.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ளது சேடாபாளையம். இந்த பகுதியை சேர்ந்தவர் சுமதி. இவரது மகன் வெற்றிவேல் (வயது 19). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆனந்தஜோதி, முகுந்தன், விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனில் வாட்ஸ்-அப் அனுப்புவதில் முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை ஆனந்தஜோதி உள்பட 6 பேர் சுமதி வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்த அவரிடம் தகராறு செய்தனர். அப்போது அங்கு வந்த சுமதியின் உறவினர் கார்த்திக் (29) என்பவர், ஏன் தகராறு செய்கிறீர்கள்? என்று தட்டி கேட்டார்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆனந்தஜோதியும், அவரது நண்பர்களும் கார்த்திகை சரமாரியாக தாக்கினர்.

    இதில் அவர் படுகாயம் அடைந்தார். காயம் அடைந்த கார்த்திக் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தனது அண்ணன் கார்த்திக் தாக்கப்பட்ட சம்பவம் அவரது தம்பி விக்னேசுக்கு தெரியவந்தது. அவரும், அவரது நண்பர் செந்தில்குமாரும் நேற்று இரவு ஆனந்தஜோதியின் வீட்டுக்கு சென்றனர். பின்பு அவரது கூரைவீட்டுக்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    அப்போது காற்று வீசியதால் தீ மளமளவென்று குடிசை வீடு முழுவதும் பரவியது. வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அருகில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

    சிலிண்டர் வெடித்ததில் அருகில் இருந்த தனசேகர், செல்வம், வெங்கடேசன், ராஜவேலு, மாரியம்மாள் ஆகியோரின் வீடுகளுக்கும் தீ பரவியது. உடனே பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

    மேலும் இது குறித்து கடலூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ஆனந்தஜோதி வீடு உள்பட 6 பேரின் வீடுகளும் எரிந்து சாம்பலானது.

    வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களும் சேதமாகின. இந்த தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்தன.

    இந்த சம்பவம் தொடர்பாக முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் முகுந்தன், விஜயகுமார், செந்தில்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக சேடாபாளையம் கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதைத்தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×